வாத்தியார் மன்னிப்பாராக... (போலி ஜோதிடர்களுக்காக எழுதப்பட்ட கவிதை இது. உண்மையான ஜோதிடர்கள் பொருத்துக்கொள்ளவும்)
....................................................................................
செவ்வாய் தோஷங்களும்
ஏழறை சனியும்
உச்சத்தில் இருப்பதாய்
வார்த்தைகள்
சன்னமாய் விழும்...
லொடலொடவென
கொட்டித்தீர்க்கும்
வார்த்தைகளில்
பரிகாரங்களின்
பரிமாற்றங்கள்...
பொய்களை
மூலதனமாக்கி
ஜோதிடர்கள்
சொல்லும் வார்த்தைகளில்
பல முதிர்கன்னிகளின்
பிரசவம்
உலகம் எப்போ அழியும்
போர் எப்போ வரும்..
அடடா...
சுனாமிக்கும் கூட
பிரசன்னம் பார்க்க
ஆரம்பித்து விட்டார்கள்
நடிகைக்கு உதடு
ஜோசியம் பார்த்து
குமுதத்தில்
அட்டைப்பட செய்தி வேறு..
மச்சில் இருக்கும்
கணவான்கெளுக்கெல்லாம்
நாடி ஜோதிடம் சொல்லுவோரே...
குச்சிலில் இருக்கும்
குடியானவன்
கோபுரம் ஏற..
ராசிக்கல் ஏதாச்சும் இருக்கா
கொஞ்சம் பாத்துத்தான் சொல்லுங்களேன்...
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அது என்ன திரு சுப்பையா அவர்களுக்கு மட்டும் விலக்கு?
ReplyDeleteகுற்றம் செய்வதை விட அதை தூண்டுவது தான் மிகக் குற்றம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவாத்தியார் மன்னிப்பாராக... (போலி ஜோதிடர்களுக்காக எழுதப்பட்ட கவிதை இது. உண்மையான ஜோதிடர்கள் பொருத்துக்கொள்ளவும்)
ReplyDelete///////
ooஉன்மை வேறு இருக்கா??
நல்ல கேள்வியோடு முடித்துள்ளீர்
விடை கிடைக்காது
remove Word verification
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in