வாத்தியார் மன்னிப்பாராக... (போலி ஜோதிடர்களுக்காக எழுதப்பட்ட கவிதை இது. உண்மையான ஜோதிடர்கள் பொருத்துக்கொள்ளவும்)
....................................................................................
செவ்வாய் தோஷங்களும்
ஏழறை சனியும்
உச்சத்தில் இருப்பதாய்
வார்த்தைகள்
சன்னமாய் விழும்...
லொடலொடவென
கொட்டித்தீர்க்கும்
வார்த்தைகளில்
பரிகாரங்களின்
பரிமாற்றங்கள்...
பொய்களை
மூலதனமாக்கி
ஜோதிடர்கள்
சொல்லும் வார்த்தைகளில்
பல முதிர்கன்னிகளின்
பிரசவம்
உலகம் எப்போ அழியும்
போர் எப்போ வரும்..
அடடா...
சுனாமிக்கும் கூட
பிரசன்னம் பார்க்க
ஆரம்பித்து விட்டார்கள்
நடிகைக்கு உதடு
ஜோசியம் பார்த்து
குமுதத்தில்
அட்டைப்பட செய்தி வேறு..
மச்சில் இருக்கும்
கணவான்கெளுக்கெல்லாம்
நாடி ஜோதிடம் சொல்லுவோரே...
குச்சிலில் இருக்கும்
குடியானவன்
கோபுரம் ஏற..
ராசிக்கல் ஏதாச்சும் இருக்கா
கொஞ்சம் பாத்துத்தான் சொல்லுங்களேன்...
Tuesday, November 24, 2009
Sunday, November 22, 2009
முகங் கோணாதே அன்பே...
நாணலின் கோணலில்
நதிக்கரை மிளிரும்
வீணையின் கோணலில்
சங்கீதம் சுரக்கும்
வெண்ணிலவின் கோணலி்ல்
இரவும் ஒளிரும்
அன்பே..
உன் முகக் கோணலில்
என் இதயம் நொருங்கிறேதே...
நதிக்கரை மிளிரும்
வீணையின் கோணலில்
சங்கீதம் சுரக்கும்
வெண்ணிலவின் கோணலி்ல்
இரவும் ஒளிரும்
அன்பே..
உன் முகக் கோணலில்
என் இதயம் நொருங்கிறேதே...
Subscribe to:
Posts (Atom)