நீ
சென்ற பின் தான்
ஒவ்வொரு கணமும்
மனம் ஏங்குகிறது
ஏதாவது பேசியிருக்கலாமென்று
உனைபற்றி
எழுதும் போது மட்டும்
ஏனோ நான்
கவிதாயினியாகி விடுகிறேன்
நீ பேசிய
வார்த்தைகள்
ஒவ்வொன்றும் வரி பிறழாமல்
புதைந்துள்ளது என் மனதில்
அழிவற்ற நிலையில்
காதல் பதிவுகளாக
உன்
கோபப்பார்வை
ஒன்று மட்டும் போதுமா...
உன் நினைவுகளை
அடியோடு வேரறுக்க?
என் மூளையின் நியூட்ரான்கள்
ஒவ்வொன்றிலும்
பதிந்திருக்கிறது உன் முகம்
அழிக்க இயலாத மெய்ப்பிம்பங்களாய்...
பிம்பங்கள் அழியும் போது
சேர்ந்த அழியும்
பிணைந்து கிடக்கும்
என் உயிரும்...
Friday, November 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
உன்
ReplyDeleteகோபப்பார்வை
ஒன்று மட்டும் போதுமா...
உன் நினைவுகளை
அடியோடு வேரறுக்க?
அதானா?