Monday, May 25, 2009

மழையும் ஒரு தேவதையும்


நீ
வரப்போகும்
நாள் தெரியும்
மழைக்கு...

என் வீட்டு
வாசல்களை
சுத்தமாக்கி செல்கிறது

உன் வருகைக்காகவே
தென்மேற்கு
பருவக்காற்றும்
ஜன்னல் வழியாய்
வயலின்
வாசிக்கிறது.

உனக்காக
எழுதிய கவிதைகள்
தாழ்வாரங்களில்
காகிதக்கப்பாலாய்
பூ சுமக்கின்றன

அடித்துப்பெய்யும்
மழையில் - நீ
கதவுகளை
தாளிடுகிறாய்...


மழை நீரோடு
கரைகிறது
என் காதல்.

12 comments:

  1. உனக்காக
    எழுதிய கவிதைகள்
    தாழ்வாரங்களில்
    காகிதக்கப்பாலாய்
    பூ சுமிக்கின்றன///

    ஏனிப்படி?
    நல்லா ஆரம்பித்து சோகமாய்!!

    ReplyDelete
  2. ஆயினும் கவிதை வெகு சரளம்!!

    ReplyDelete
  3. என் வலைக்கு உங்களை வரவேற்கிறேன்!!

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  5. அனைவரது வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  6. தமிழர்ஸ் ஓட்டுப்பட்டையே சேர்த்தாச்சு.

    ReplyDelete
  7. உங்கள் பதிவுகள் அருமை வாழ்த்துக்கள்...

    //உனக்காக
    எழுதிய கவிதைகள்
    தாழ்வாரங்களில்
    காகிதக்கப்பாலாய்
    பூ சுமிக்கின்றன//

    பிடித்த வரிகள்..

    ReplyDelete
  8. thangaikku....

    un sorkkal mottu oliththu vaithirukkum katru pola
    vaasanigalai thanagathi kondirukkiradhu

    oru siriya thiruththam : காகிதக்கப்பாலாய்
    பூ சுமிக்கின்றன

    kaakitha kappal -kappaaal illai
    poo sumakkindrana - sumikkindrana illai

    thodrndhu eluthungal vaazhthukkal

    enadhu valaipoovil inaindhadharkku nandri

    -நேசமித்ரன்
    http://nesamithran.blogspot.com/

    ReplyDelete
  9. அருமை ... எங்களுக்கு ஒரு புதிய கவிதாயினி கிடைத்துவிட்டார் ...

    ReplyDelete
  10. மழையின் போது எல்லாமே அழகு!!!

    ReplyDelete
  11. மழையைப் பற்றிய உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. மழை பொழிவதை ஜன்னல் வழி வேடிக்கைப் பார்ப்பது ஒரு வகை இன்பம்.

    ReplyDelete