Saturday, May 23, 2009

சில ரோஜாக்களும் ஒரு கவிதையும்

உனக்கு நியாபகம் இருக்கிறதா...
முதல் சந்திப்பின் போது
சில ரோஜாக்களை
காகிதத்தில் சிறையெடுத்து
என் கரம் தழுவி
வாழ்த்து சொன்னாய்..

அப்போதே தெரியாமல் போனது...
இந்த ரோஜாக்களை போல
நானும் உன்னிடம்
சிறைபடுவேன் என்று!

மீனலோசனி.

No comments:

Post a Comment